ஓர் அழகான காலை
ஓர் அழகான காலை
மேகங்களின் நடுவே – எட்டிப் பார்த்து மறைந்து கொள்ளும் சுட்டித் தனமான சூரியன்
பூமியை – அவ்வப்போது தொட்டு தொட்டுச் செல்லும் செல்லமான மழைத் துளிகள்
வானத்தை நோக்கி – போட்டிப்போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய் பறந்து செல்லும் பறவைகள்
மென்மையான காற்று – அந்த காற்றுக்கு ஏற்ப தாளம் போடும் மரங்களும் செடிகளும்
வயல்வெளிகளில் – துள்ளி விளையாடும் சின்னஞ்சிறுக் குழந்தைகளின் சந்தோஷங்கள்
பூந்தோட்டங்களில் – புன்னகையுடன் பூக்களை பறிக்கும் பூப்போன்ற அழகிய பெண்கள்
அடடா !!!என்ன ஓர் அழகான காலை!! பார்க்கத் தவறி விட்டேனே என்று என் வாழ்வின் முதல் வருத்தம் .
-ர.தமிழ் செல்வி (இறுதியாண்டு தகவல் தொழில்நுட்பம்)